Tuesday, November 29, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -11

Visit BlogAdda.com to discover Indian blogs
நெஞ்சை அள்ளூம் பம்பா சரோவரம்

முதலில் நவபிருந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டு அடுத்து சிந்தாமணி லக்ஷ்மி நரசிம்மரையும் தரிசனம் செய்து விட்டு நாங்கள் அடுத்து சென்ற இடம் பம்பா சரோவரம் ஆகும்.
தற்போதைய ஆனேகுந்தி ஹம்பி பகுதியாகிய இந்த பம்பா க்ஷேத்திரத்தை தலைநகராகக் கொண்டு வாலி ஆண்டு வந்ததாக வரலாறு. அமைதி தவழும் இந்த சரோவரின் கரையில் ஆதி காலத்திலிருந்தே தவ சிரேஷ்டர்கள் தவம் புரிந்து வந்துள்ளனர். விஜயநகர சம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்த ஸ்ரீ வித்யாரண்யர் தவம் புரிந்த இடம் இது.


தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி

தருவதற்கொன்றும் இல்லை தலைவனே எனை ஆதரி

என்ற பாடலை தாங்கள் கேட்டிருப்பீர்கள், இப்பாடலில் கூறியுள்ளது போல இராமபிரானுக்காக சுவை மிகுந்த பழங்களை சேர்த்து வைத்திருந்த சபரி அன்னை வாழ்ந்த குகை இக்குளக்கரையில்தான் உள்ளது. அன்னை சமர்பித்த அந்த கனிகளை மிகவும் உவப்புடன் ஏற்றுக் கொண்டார் தாசரதி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க தாமரை மலர்களால் நிறைந்து இரம்மியமாக காட்சி தருகின்றது பம்பா சரோவர்.

திருக்கயிலாய மலையுடன் சார்ந்த மானசரோவரைப் போலவே இந்த பம்பா சரோவரமும் பிரம்மதேவரின் மனதில் இருந்து தோன்றிய தடாகம் ஆகும்.

பாரத கண்டத்தில் உள்ள மற்ற மூன்று சரோவர்கள் இராதஸ்தானில் உள்ள புஷ்கர் சரோவர் மற்றும் குஜராத்தில் உள்ள நாராயண சரோவர், பிந்து சரோவர் ஆகும். இந்த தடாகத்தில் எப்போதும் நீர் வற்றுவது இல்லையாம்.

தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் பம்பா சரோவர்
(மானசரோவருக்கு இனையானது)

குளக்கரையில் பிரம்மாண்டமான மரங்கள் உள்ளன நாங்கள் சென்ற சமயம் அருமையான ஆரஞ்சு நிற மலர்கள் பூத்து அருமையான காட்சி அளித்தது. அதிலிருந்து வந்த சுகந்த மணம் அந்த இடத்தின் தெய்வீகத் தன்மையை மேலும் அதிகப் படுத்தியது. ஸ்ரீ வாதிராஜர் தீர்த்த பிரபந்தத்தில் பம்பாவைப் பற்றி குறிப்பிடும் போதுஇது பாபத்தை தலைகீழாக்கி விடும் க்ஷேத்திரம் என்று கூறுகிறார். அதாவது பாபம் என்பதில் உள்ளபாவை எடுத்து இறுதியில் இட்டால் பம்பா என்றாகிவிடும். எனவே பாப பரிஹாரத்திற்கு தலை சிறந்த தலம் இந்த பம்பா க்ஷேத்திரம். இதற்கு “தக்ஷிண காசி” என்ற பெயரும் உண்டு. இந்த சரோவரின் கரையில் சபரி தனது குருநாதர் மாதங்க மஹாரிஷி, ஸ்ரீராமர் வருவார் என்று சொன்ன சொல்லுக்காக அவருக்காக தவம் செய்து காத்திருந்த குகையும், மஹாலக்ஷ்மி மற்றும் சிவபெருமானின் ஆலயங்களும் உள்ளன.

கணேசர்


விஜயலக்ஷ்மி அம்பாள்

இங்குள்ள ஆதிவாசி இனத்தினர் இந்த குகையையும் சரோவரையும் பராமரித்து வருகின்றனர். நாங்கள் சென்ற சமயம், ஒரு லம்பாடிப்பெண், சரோவரின் கரைகளில் விழுந்திருந்த குப்பைகளை கூட்டி கூடையில் அள்ளிக் கொண்டிருந்தார். சீதாப் பிராட்டியாரைக் காணாமல் அலைந்து கொண்டிருந்த சமயம் இங்கு இராமச்சந்திர மூர்த்தி வந்த போது அன்னை சபரி அவருக்கு பாத பூஜை செய்தார். அந்த பாதச்சுவடுகளையும், சபரி இராமர் வரும் வரை காத்திருந்த போது ஹோமம் செய்த ஹோம குண்டத்தையும் இந்த குகையில் தரிசிக்கலாம்.

ஹனுமன்

குகைக்கு அருகிலேயே மற்ற இரண்டு ஆலயங்களும் உள்ளன. இங்கு சிவபெருமானையும் பம்பா தேவியையும் இங்கு தவம் செய்த ஒரு முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இவரது சீடர்கள் இப்போது இந்த ஆலயங்களை பராமரித்து வருகின்றனர். விஜயலக்ஷ்மி அம்மன் சன்னதியின் முன்னே கணேசர் மற்றும் ஹனுமன் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் அமர்ந்த கோலத்தில் அன்னை அருளாட்சி நடத்துகின்றாள் அலைமகளின் முன்னே அனேகம் சாலக்கிராமங்களும் உள்ளன. இரண்டு ஆலயங்களையும் ஒரு சிறு வாயில் இணைக்கின்றது.


தான் சுவைத்த பழங்களைத் தந்த தாய் சபரி
ஸ்ரீராமருக்கு பாத பூஜை செய்த இடம்


படங்களுக்கு நன்றி

Aalayam Kanden





சிவபெருமானையும் அன்னை மலைமகள் பார்வதியையும் வணங்கி விட்டு வெளியே வரும் போது. ஆசிரமத்தின் முன்னறை சமையல் கூடமாக ( அல்லது வரும் பக்தர்களுக்கு பிரசாதம் படைக்கவோ) மாறியிருந்தாக தோன்றியது. வெளியே வந்து மேலிருந்து பார்த்தபோது ( ஆலயத்திற்கு செல்ல சுமார் பதினைந்து படிகள் ஏறி செல்ல வேண்டும்) சபரி அன்னை நீராடி புனிதப்படுத்திய சரோவர் இன்னும் அழகானதாக தோன்றியது.


பம்பா சரோவரில் தவம் செய்யும் யோகிகள் தமக்கோ அல்லது பிறர்க்கோ உடல் நலம் சரியில்லாத போது வாலி வீழ்ந்த இடத்தில் உள்ள எலும்புகளை எடுத்து வந்து தேய்த்து நிவாரணம் தருவார்களாம். அஞ்சனாத்ரி மலை ஏறி பால ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டுமென்பதால் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினோம்.

Labels: , , , ,

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -10

Visit BlogAdda.com to discover Indian blogs
நவ பிருந்தாவன மகான்களின் அருமையான தரிசனத்திற்கு பிறகு நாங்கள் சென்ற இடம் சிந்தாமணி கோயில் வளாகம் ஆகும். இங்கிருந்துதான் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமபிரான் வாலியின் மீது அம்பெய்தினாராம். மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீமகிஷாசுர மர்த்தினி ஆலயங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. துங்கபத்ரையின் இக்கரையில் ஆனேகுந்தி படகுத்துறையின் இடப்பக்கம் அழகான தாரா பர்வதம் உள்ளது. வலப்பக்கம் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சிந்தாமணி அமைந்துள்ளது. நாங்கள் வண்டி மூலமாக இவ்விடத்தை அடைந்தோம்.
ருத்ராக்ஷ பந்தலில்
காசி விஸ்வநாதர் அன்னபூரணி அம்பாள்

இந்த
ஹம்பியும் ஆனேகுந்தியும் இனைந்த பகுதிதான் இராமாயணக்கால கிஷ்கிந்தை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இராமபிரான் சீதாதேவியை பிரிந்து அவரைத்தேடி வந்த போது சுந்தரன் அனுமனின் மூலம் சுக்ரீவனுடன் நட்பு கொண்டு வாலியை அம்பு எய்து வதம் செய்த இடம்தான் துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ள சிந்தாமணி. இராவணன் சீதா தேவியை கடத்தி சென்ற போது தாயார் தன்னுடைய அணிகலன்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி கீழே போட்ட இடம்தான் இந்த த்ரேதாயுகத்து கிஷ்கிந்தை. ஆனேகுந்திக்கு “பம்பா க்ஷேத்ரம்” என்ற பெயருமுண்டு என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றது. இந்த பம்பா க்ஷேத்ரம்தான் வாலி மற்றும் சுக்ரீவனின் தலைநகராக இருந்தது. அருகிலேயே வாலியின் மனைவி தாராவின் பெயர் கொண்ட தாரா மலையும் உள்ளது. துங்கபத்ரையின் இந்த தெற்குக்கரையில்தான் ஆஞ்சனேயர் அவதரித்த, அஞ்சனை ஹனுமனை வளர்த்த அஞ்சனாத்ரி மலை உள்ளது. இன்றும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் செல்லாமல் அவருடைய நாமம் ஒலிக்கு இடமெல்லாம் ஆனந்த கண்ணீருடன் அமர்ந்து கேட்கும் ஹனுமனின் சஞ்சாரம் உள்ள இடம் இந்த ஆனேகுந்தி ஹம்பி பகுதி என்பது ஐதீகம்.
சிந்தாமணி ஆலய வளாக வாயில்
சிவன் கோயில் கோபுரம்

நந்தி
கல்லிலே கலை வண்ணம்
சிவன் சன்னதிக்கு செல்லும் படிகள்
இவ்விடம் சிந்தாமணி என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணமும் உண்டு அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அன்னை சீதா தேவியை தேடி வந்த இராமபிரானிடம் சுக்ரீவன் சீதா தேவியின் நகைகளை காண்பித்த இடம் என்பதால் இப்பெயர் வந்ததாம். இத்தலம் பூமாதேவியின் பிறந்த வீடு. இராமர் முதன் முதலாக சுக்ரீவனை சந்தித்த குகையும் இங்குள்ளது. நாங்கள் சென்ற சமயம் நரசிம்மர் சன்னதியில் பட்டர் இருந்தார் அவர் திவ்யமாக சேவை செய்து வைத்து தீர்த்த சடாரி பிரசாதமும் வழங்கினார். மற்ற சன்னதிகள் பூட்டியிருந்தன. எனவே உள்ளுரில் விசாரித்துக்கொண்டு அல்லது ஒரு வழிகாட்டியுடன் செல்வது நல்லது.

வாலியின் எலும்பு மலை
விழுந்து விடுவது போல உள்ள பாறைகள்
சிவன் சன்னதிக்கு படிகளில் மேலே ஏறி செல்ல வேண்டும். இங்கு தவம் செய்த மகான் ஒருவர் சிவலிங்கத்தையும் அன்னபூரணி அம்மையும் பிரதிஷ்டை செய்தாராம். அம்பாளின் முன்னர் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவசக்தி இருவரும் ருத்ராக்ஷ பந்தலில் அருட்காட்சி தருகின்றனர். (மேலே உள்ள படம், நன்றி - ஆலயம் கண்டேன் வலைப்பூ )அந்த மகான் இக்கோவிலின் கீழேயே அப்படியே ஒரு நாள் மறைந்து விட்டாராம்.
சிவ பெருமான் விமானம்
ஸ்ரீராமர் பாதம்
(இங்கிருந்துதான் வாலியை வீழ்த்த அம்பு எய்தினாராம்)

கீழே உள்ள ஒரு இடத்தில் இருந்துதான் ஸ்ரீராமர் அம்பெய்து வாலியை கொன்றாராம். எதிரே தெரியும் மரங்கள் வரை இராமனின் அம்புகள் சென்று வாலியை வீழ்த்தியதாம். இன்னும் அந்த இடத்தில் வாலியின் எலும்புகள் குவியலாக உள்ளதாக நம்பப்படுகின்றது. பின்னர் இங்கிருந்து பம்பா சரோவர் சென்றோம்.

Labels: , , , , ,

Sunday, November 27, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -9

Visit BlogAdda.com to discover Indian blogs
நவ பிருந்தாவனம் பஜே! நவ பிருந்தாவனம் பஜே!



நவபிருந்தாவனத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

இனி நவபிருந்தாவத்தை தரிசனம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் காணலாமா?

1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது.

2. இந்த தீவைச்சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது.

3 எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.

4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி, துண்டு அணிந்து செல்வது சிறந்தது.

5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது.

6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது.

7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது.

8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தாவனங்களை வலம் வரலாம்.

9. அங்கப்ரதக்ஷணம் செய்யக்கூடாது.

10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தாவனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக்கூடாது.

ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ்டானங்களில் கண்டிப்பானவர்கள், எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் என்று திரு. .ஏம். இராஜகோபால் அவர்கள் பக்தர்களின் நன்மையை உத்தேசித்து இவ்விதிமுறைகளை தொகுத்துள்ளார். நாம் நவபிருந்தாவனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற செய்யக் கூடாத செயல்களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூதாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் உள்ள மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நான்கு தூண்களுடன் வியாஸராஜர் பிருந்தாவனம்


இனி நவபிருந்தாவனங்களின் அமைப்பைப் பார்ப்போமா, அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடுநாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த இடத்தில்தான் ஸ்ரீபிரஹலாதன் தவம் செய்திருக்கின்றார். இவருக்கு வலப்புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப்பின் பிருந்தாவனஸ்தரானவர்கள் பிருந்தாவனங்கள் உள்ளன. இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இந்த பிருந்தாவனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன. அவரது பிருந்தாவனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யாணை சிற்பங்கள் உள்ளன.

இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர். ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். இல்லை ஸ்ரீரகுவீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தாவனமாக விளங்குகின்றது. இவரது பிருந்தாவனத்தில் சன்னியாசி, அனுமன், வீரன் சிற்பங்கள் உள்ளன. நவ பிருந்தாவனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்லவேண்டும் அங்கு கிடைக்காது.

எல்லோரும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்திவிட்டு வரும் வரை அங்கே அமர்ந்து மகான்களில் அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன் இன்னும் பலமுறை தங்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வெளியில் வந்து படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி வந்து சேர்ந்தோம்.

நவ பிருந்தாவன மகான்களை தரிசித்து விட்டு

திருப்தியுடன் திரும்புகின்றோம்


துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மண்டபம்

துங்கபத்ரையில் ஒரு கடற்காக்கை

ஆனேகுந்தி திரும்பி வந்து விட்டோம்

ஆனேகுந்தி திரும்பி வந்த போது வைக்கோற்போராக மாறியிருந்த மண்டபம் நாராயண மண்டபம் என்று அறிந்தோம். HOOVA CAFÉ சென்றோம். மதிய உணவு தயாராக இருந்தது. உணவு வீட்டுச் சாப்பாடுதான், இனிப்பு, பாயசம், அப்பளம் ஊறுகாய் என்று தேவாமிர்தமாக இருந்தது. அப்போது தமிழில் பேசி ஒரு இளைஞர் எல்லா உதவிகளும் செய்தார் அவர் யார் என்று கேட்ட போது தான் ஒரு வழிகாட்டி என்றும் பெயர் மஞ்சுநாத் என்றும் அவரது செல் போன் எண் 09449284490, 09480567616 என்றும் முன்கூட்டியே போன் செய்தால் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவேன் என்று கூறினார்.

ஆனேகுந்தி HOOVA CAFEல் மதிய உணவு

தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் அல்லவா? அதனால்தான் ஔவையாரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறுகிறார். மதிய உணவிற்கு பிறகு திரு.தனுஷ்கோடி அவர்கள் மடத்திற்கு அன்னதானத்திற்காக அனைவரின் சார்பாக நன்கொடை வழங்கலாம் என்று கூறினார், எனவே இராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவன மடத்திற்கு சென்றோம், வெளியே கதவு சார்த்தியிருந்தது ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவர்களிடம் பேசினோம் எங்கள் எண்ணத்தை அறிந்த அவர்கள் கதவை திறந்து அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். நன்கொடையை பெற்றுக்கொண்டு இரசீது கொடுத்து, ஹரிவாயு குருவிற்கு ஆரத்தி காட்டி தரிசனம் செய்து வைத்து நிறைய பிரசாதமும், அங்கவஸ்திர மரியாதையும் கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர்.

ஆனேகுந்தி இராகவேந்திரர் பிருந்தாவனம்

தாங்கள் மேலே படித்த விதிமுறைகள் எல்லாம் இங்கு அனைவரும் காணும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளன. இந்த மிருத்திகா பிருந்தாவனம் மந்தராலய மடாதீசர் ஸ்ரீஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தரால் 2001 ஆண்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டதாம். சாயுங்காலமே ஆனேகுந்தி செல்பவர்கள் இங்கு இரவு தங்கிக்கொள்ளலாம், உணவு ஏற்பாடுகளும் முன் கூட்டியே சொன்னால் செய்து தருகிறார்கள் நம்முடைய பொருட்களையும் இங்கே வைத்து விட்டு செல்ல வசதிகள் உள்ளன. காலையில் பட்டர் நவபிருந்தாவனம் செல்லும் போது அவருடன் கூடவே சென்று அபிஷேகம் பார்க்கலாம். இராகவேந்திர மடத்தின் மேலாளர் M.S.Ramesh Jodiar, 09480305874, மடத்தின் தொலைப்பேசி எண்: 08533-267733. இவ்வாறு ஆனேகுந்தியில் ஹரிவாயு குருவின் தரிசனம் பெற்றபின் சிந்தாமணிக்கு வண்டி மூலம் புறப்பட்டு சென்றோம்.

பூவில் உள்ள எறும்பைப் பாருங்கள்


பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

பல்லுயிர்க்கு குங் கல்லிடைப்

பட்டதேரைக்கும் அன்றுற் பவித்திடு கருப்
பைதுறு சீவனுக்கும்

மல்குஞ் சாரசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றுமொரு மூவர்க்கு மியாவருக்கும் அவரவர்
மனச்சலிப்பிலாமலே

படியளக்கும் அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பன் திருவடிகளே சரணம்.

Labels: , ,