Sunday, January 1, 2012

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -19

Visit BlogAdda.com to discover Indian blogs
 குரு இராகவேந்திரரும் அபணார்ச்சாரியரும்



அருள் பாலிக்கும் அழகு


 
 இப்படங்கள் எல்லாம் மும்பையைச் சார்ந்த திரு. இராஜன் ஐயர் வரைந்தவை. விநாயகரின் படங்களை வரைவது இவரது தனித்தன்மை. இவரது மற்ற படங்களைக் காண   Rajandraws  செல்லவும். 


அருமையாக குரு ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் மந்திராலயத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு  தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து பிச்சாலிக்கும் பஞ்சமுகிக்கும் செல்ல கிளம்பினோம். இவை இரண்டும் துங்கபத்ரையின் மறு கரையில்  கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளன.  பிச்சாலி மந்திராலயம் ரோட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில்  துங்கபத்ரை நதிக்கரையில் அமைந்துள்ளது. மந்திராலயத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.   மந்திராலயத்திலிருந்து துங்கபத்ரா பாலம் வழியாக செல்வதென்றால், முதல் மாதவரம் சென்று அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி, ரெய்ச்சூர் செல்லும் வழியில் துங்கபத்ரா பாலத்தை கடந்து கில்லேசுகர் முகாம் வந்து அங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் பிச்சாலியை வந்தடையலாம். பாதை பழுது பட்டிருந்தால் பரிசல் வழியாக பிச்சாலி வரலாம்.

எங்களுடன் வந்த திரு.மோகன் சுவாமி  அவர்கள் முன்னரே இங்கெல்லாம் வந்துள்ளார் என்பதால் அவர் துங்கபத்ராவை பரிசல் மூலம் கடந்து அக்கரை சென்று விட்டால் அங்கு ஜீப்கள் கிட்டும் சீக்கிரமாக சென்று விடலாம் என்று கூறினார் நாங்கள் அவ்வாறே சென்று திரும்பினோம். 

 ஏக சிலா பிருந்தாவனம், பிச்சாலி 
பிச்சாலியை தரிசிப்பதற்கு முன்னால் பிச்சாலியின் சிறப்பைக் காண்போமா?  பிட்சாலயா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் இன்று    பிச்சாலி என்று அழைக்கப்படுகின்றது.  துங்கபத்ரா நதிக்கரையில் இங்கு  ஸ்ரீபாதராயர்  தங்கி தவம், ஜபம் செய்யும் காலத்தில், ஹிரணியனை மடியில் போட்டு வள்ளுகிரால் அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்ம தேவரை இங்கு பிரதிஷ்டை செய்தார்.  அவர் இங்குள்ள ஜபாடகட்டே என்னும்  கல் மேடையில் அமர்ந்து உபன்யாசம் செய்துள்ளார். ஸ்ரீவியாஸராஜர் ஹனுமன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஸ்ரீஜிதாமித்ரர் இங்கு நாக பிரதிஷ்டை செய்துள்ளார். இவ்வாறு பலமகான்களால் புனிதமடைந்த இடம் இந்த பிச்சாலி ஜாபட கட்டே.  இந்த பிச்சாலியில் குருதேவர் பன்னிரண்டு வருடம் தனது சீடரும் நண்பருமான அபர்ணாச்சாரியாருடன் வசித்துள்ளார். 
 
 
ஸ்ரீபாதராஜர்  பிரதிஷ்டை  செய்த உக்ர நரசிம்மர்

இங்குதான் இராகவேந்திரரின் அத்யந்த சிஷ்யரும் நண்பருமான அப்பணாச்சாரியார் வசித்து வந்தார். அவர் மிகச்சிறந்த ஹரி பக்தர், வேத வேதாங்களில் கரை கண்டவர், சம்ஸ்கிருத ஞானி, அபார கருணை கொண்ட ஆசிரியர். இவரது ஞானத்தை பற்றி கேள்விப்பட்டு இவரிடம் சிஷ்யராக இருந்து கல்வி கற்க பாரத தேசமெங்கும் இருந்து எண்ணற்ற மாணவர்கள் வந்து தங்கி கல்வி கற்றனர்  அவர்களுக்கு ஞானதானம் வழங்கி வந்தார் அப்பணாச்சாரியார் . இவர் 300  ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆயினும் அக்கால வழக்கப்படி தனது சிஷ்யர்களுக்கு தானே உணவு அளித்து வந்ததால் வறுமையில் வாடினார். எனவே இவரது சிஷ்யர்கள் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வந்த அரிசியை ஒரு துணியில் கட்டி துங்கபத்ரா நதியில் நனைத்து  ஆலமரத்தில் கட்டி விடுவார். பாடம் முடிவதற்குள் இவரது யோக சக்தியால்  அது சாதமாகி விடும் அதை சிஷ்யர்களுக்கு அளிப்பார். அவ்வளவு சிறந்த யோகி அவர்.  துங்கபத்ரை நதிக்கரையில் ஆலமரத்தின் அடியில் உள்ள கல்மேடையில்(ஜாபட கட்டே) அமர்ந்து வேதம், உபநிஷத் சாஸ்திரம் ஆகியவற்றை இவர் தன் மாணவர்களுக்கு போதித்து வந்தார்.

பசு மடத்தில் பசுக்கள்

இவ்வாறு அப்பணாச்சாரியார் பிச்சாலியில்  சேவை செய்து வரும் காலத்தில், கும்பகோணத்திலிருந்து இராகவேந்திர சுவாமிகள் ஆதோனி வர முடிவு செய்தார், அதற்காக தனது அருளால் எழுத்தறிவில்லாமல் இருந்து ஞானியான வெங்கண்ணாவிடம் தான் அங்கு வருவதாக செய்தி அனுப்பினார். திவான் வெங்கண்ணாவும் வெகு சிறப்பாக குருதேவரை வரவேற்றார், இராகவேந்திரர் வெங்கண்ணா வீட்டில் மூல இராமருக்கு பூஜை செய்யும் போது நவாப் வந்து மாமிசம் கொடுக்க அதை பழங்களாக மாற்றி அற்புதம் செய்த இராகவேந்திரர் மாஞ்சாலியை பெற்றார். 

 அந்தி சாயும் நேரத்தில் பிச்சாலியில்
துங்கபத்ரையின் அழகு 

இச்சமயம் பிச்சாலிக்கு வந்த குருதேவர் அதன் இயற்கை அழகிலும் , அப்பணாச்சாரியரின் அப்பழுகற்ற  பக்தியாலும் மகிழ்ந்தார். அப்பணாச்சாரியாரும் இராகவேந்திரரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.  துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆகி துங்கபத்ராவானது போல இராகவேந்திரரும், அப்பணாச்சாரியரும் இனைந்து ஹரி பக்தியை பரப்பினர். குருதேவர் மந்திராலயத்தில்  வசித்து வரும் போது பிச்சாலி வருவார் அவர் கல்மேடையில் அவர்  அமர்ந்திருக்க, அவரது திருப்பாதங்களில் அப்பணாச்சாரியார் அமர்ந்து சேவை செய்வார். இருவரும் பகவத் விஷயத்தில்  ஈடுபடுவர்.  இவ்வாறு 13 வருடங்கள் இருவரும் ஹரி பக்தியை பரப்பி வந்தார்கள். குருதேவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் வந்தது, அப்பணாச்சாரியார் இருந்தால் தன்னை  அனுமதிக்க மாட்டார் என்று அறிந்திருந்த இராகவேந்திரார் மத்வசத்சங்கத்திற்கு சென்று வருமாறு அனுப்புகின்றார். மனதில்லையானாலும் செல்லுகின்றார் அப்பண்ணாச்சாரியார்.
இராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்க்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கு ஒரு உரையை ஆற்றினார். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
  பின்னர் பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டு விடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார் அப்பணாச்சாரியார். வழியில் துங்கபத்ரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கி  ஓடிவருகிறார். சங்கரர் அழைத்ததும் நதியில் பாதம் பதித்து வந்த பத்மபாதர் போல இக்கரை வந்தார் அப்பணாச்சாரியார்,  அவர் அங்கு வந்த போது பிருந்தாவனத்தின் மேல் கடைக்கல் வைக்கப்பட்டு கொண்டிருந்தது.  ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணாச்சாரியார் பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா  தழுதழுக்கின்றது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் நான் உனக்கு காட்சி தருவேன் என்று வாக்கு கொடுக்கின்றார் இராகவேந்திரர்.
.

 அப்பணாச்சாரியார் இயற்றிய குரு ஸ்லோகம்  
ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஷிரஸ்ப்ருஷந்தி |
பூர்வோத்தராமித தரங்க சரத்ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா || (1)


ஜீவேஷ பேத குணபூர்த்தி ஜகத் ஸுஸத்வ
நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா |
துர்வாத்யஜாபதி கிலை: குருராகவேந்திர
வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது  || (2)


ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்ஜத்வய பக்தி மத்ப்ய: |
அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம் || (3)


ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்'
நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத் |
தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்  || (4)


பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
ஸங்காக்னிசர்ய: ஸுகதைர்யஷாலி  |
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஷோ
துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:  || (5)


நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:  |
வித்வத் பரிக்ஞேய மஹாவிஷேஷோ:
வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:  || (6)


ஸந்தான ஸம்பத் பரிஸுத்த பக்தி:
விக்யான வாக்தேஹ ஸுபாடவாதீன் தத்வா  |
ஷரீரோத்த ஸமஸ்த தோஷான்
ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:  || (7)


யத்பாதோதக ஸஞ்சய: ஸுரநதீ முக்யாபகாஸாதிதா:
ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:  |
துஸ்தாபத்ரய நாஷனோ புவிமஹா வந்த்யாஸுபுத்ர ப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஷ்ரயே || (8)


யத்பாத கஞ்'ஜரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே  |
யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
தத்தரிஷனம் துரிதகானன தாவபூதம்  || (9)


ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன 
விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:  || (10)


ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ
ஞானபக்தி சுபுத்ராயு: யஷஸ்ரீ புண்யவர்த்தன:  || (11)


ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு
ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (12)


அபரோக்ஷீக்ருத ஸ்ரீஷ: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (13)


தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
ஷாபானுக்ரஹ ஷக்தோன்யோ ராகவேந்திராந்நவித்யதே  || (14)


அக்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஷயாப ஸ்ம்ருதிக்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:  || (15)


தோஷாஸ்தே நஷமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ஸம்ஷய:  || (16)


ஹந்துந: காயஜான்'தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்  || (17)


இதி காலத்ரயேந்நித்யம் ப்ரார்த்தனாம் கரோதி :
இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:  || (18)


அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஷா:
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:  || (19)


ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஷக்தி ப்ரதஷிணம்
கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
ஷிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே  || (20)


ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
தவஸங்கீர்த்தனம் வேதஷாஸ்திரார்த்த ஞானஸித்தயே  || (21)


ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே  |
நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி பேனோத்கடே
துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா  || (22)


ராகவேந்திரகுருஸ்தோத்திரம் : படேத்பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருதிஸ்த்வரயாபவேத்  || (23)


அன்'தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
பூர்ணாயு: பூர்ணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத்பவேத்  || (24)


: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
தஸ்ய குக்ஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷ்ணாத்  || (25)




யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்'ஜோபிவாஜன:
ஸ்தோத்ரேணானேன : குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:  || (26)


ஸோமஸூர்யோ பராகேச புஷ்யார்காதி ஸமாகமே
யோநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம்ஜபேத்
பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ஜாயதே  || (27)


ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தா வனாந்திகே
தீபஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்  || (28)


பரவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாத் நாத்ரகார்யா விசாரணா  || (29)


ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான் னாத்ரஸம் ஷய:  || (30)


யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் : படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ஹி பவேத் தஸ்யா ஸுகம் கிஞ்சன  |
கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாத ப்ரஸாதோதயாத்
கீர்த்தி: திக்விதிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி  || (31)


இதி ஸ்ரீராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணா பிதை:  || (32)


பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே  || (33)



துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
ஸ்ரீராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே  || (34)

 பிச்சாலியில் துங்கபத்ரை
அமைதியாக பாயும் அழகு

இராகவேந்திரர் பிருந்தாவனஸ்தர் ஆன பின்னும்  தினமும் பிச்சாலியிலிருந்து மந்திராலயம் வந்து குருதேவரை வணங்கிச்செல்வதை கடமையாக கொண்டிருந்தார்.மழையிலும் வெள்ளத்திலும், துங்கபத்ரையில் தன் நண்பர் அலைந்து திரிவதைக்கண்டு இராகவேந்திரர் பிச்சாலியில் ஜபாட கட்டேயில் ஒரு ஏக சிலா பிருந்தாவனம் அமைக்குமாறும் அங்கு வந்து தான் காட்சி தருவதாகவும் அருளினார். அப்பணாச்சாரியார் அமைத்த ஏல சிலா பிருந்தாவனத்தில் ஜோதி ரூபத்தில் காட்சி அளித்தார் குருதேவர். இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட பிச்சாலியை அடுத்த பதிவில் தரிசனம் செய்யலாமா அன்பர்களே.   

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள்.

சென்ற வருடம் ஜனவரி முதல் நாளன்று நவ பிருந்தாவனம் தரிசனம் செய்து மந்திராலயத்திற்கு புறப்ப்ட்டோம். இந்த ஆண்டு முதல் நாள் அன்பர்களாகிய தங்களுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.  

Labels: , , ,

1 Comments:

Blogger Guru said...

Thank you so much

May 30, 2017 at 8:03 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home