Tuesday, October 9, 2012

திருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -7

Visit BlogAdda.com to discover Indian blogs
சந்திரப் பிரபை வாகன சேவை



மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிரும் இராஜகோபுரம் 




ரத சப்தமிக்காக  எழிலாக வைக்கப்பட்டிருக்கும்
 சில மின்   விளக்கு அலங்காரங்கள். 






 சந்திர பிரபையில் மலையப்பசுவாமி



அதிகாலையில் சூரியபிரபையில்   சிவப்பு மாலையுடன் சேவை சாதித்த மலையப்பசூவாமி அன்றைய தினம் இரவு வெள்ளை(மல்லிகை) மாலையுடன் சேவை சாதிக்கும் அழகு.



பின்னழகு

கை விளக்கு ஏந்திய காரிகைகள்

அதிகாலை முதல் இரவு வரை இந்த பக்தர்கள் சலிக்காமல் பெருமாளி முன்னர் ஆடி வரும் இந்த  பக்திக்கு தலை வணங்குகின்றேன். 

ஸ்ரீவேங்கடேச  மங்களாசாசனம் 

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே,
ஸர் லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் (13)

ஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும் உறைந்து நிற்கும் உத்தமன், உத்தம பாகவதர்களின் திருஉள்ளத்திலும் உவகையுடன் உறைகின்றான். அத்தகைய திருவேங்கடவனுக்கு    எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். 

மங்களாசாஸந பரைர் மாதாசர்ய புரோகமை,
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யைஸ் ஸத்க்ருதாதாஸ்து மங்களம் (14)

என்பெருமானுக்கு பல்லாண்டிசைப்பதென்னும் மங்களாசாசனத்தில்  என் ஆச்சார்யர்களும், அவர்களுடைய  ஆச்சார்யர்களும் அதே போல பூர்வாசார்யகளும்  போற்றப்பட்ட  திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

********

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது வந்து சேவித்த அன்பர்கள் அனைவருக்கும் திருவேங்கடவனின் திருவருள் சித்திக்க பிரார்த்தித்து கொள்கிறேன்,. வரும் பதிவுகளின் சில திவ்ய தேசங்களின் தரிசினத்துடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.  




Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home